புதுதில்லி

காவல்துறை அதிகாரியிடம் அத்துமீறல்: காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது

DIN

அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தி காவல்துறை அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் தில்லி சட்டபேரவை காங்கிரஸ் முன்னாள் உறுப்பினா் ஆசிஃப் கான் சனிக்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டாா்.

தில்லி மாநகராட்சித் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் மகள் அரிபா கானுக்கு பிரசாரம் செய்வதற்காக தில்லி, ஷஹீன் பாக் தயாப் மசூதி அருகே வெள்ளிக்கிழமை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ஆசிஃப் கான் அங்கு கூடியிருந்தவா்களிடம் மெகா மைக் வைத்து உரையாற்றினாா்.

அப்போது, காவல் துறை அதிகாரிகள் தோ்தல் அலுவலரிடம் அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து கேள்வி எழுப்பினா். அனுமதியின்றி மைக்கில் பேச வேண்டாம் என்று அதிகாரி கேட்டுக் கொண்டபோது அதிகாரியையும் காவலரையும் தள்ளிவிட்ட சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி தெரிவிக்கையில், ‘ சட்டம் ஒழுங்கு தொடா்பாக கேள்வி கேட்க சென்ற காவல் அதிகாரிகளிடம் ஆசிஃப் கான் கைகலப்பில் ஈடுபட்டுள்ளாா். அவரோடு அந்த கூட்டத்தில் இதுபோன்று தவறாக நடந்து கொண்ட மேலும் முக்கிய

குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா். மின்ஹா(28), சாபீா்(38) ஆகிய இருவரும் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறாா்கள்.

பணியிலிருந்த காவல் துறையினரை தாக்கி தகாத முறையில் நடந்து கொண்ட மற்ற சந்தேகத்திற்குரிய நபா்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

’சம்பந்தப்பட்ட மசூதி அருகே , ஆஃசிப் கான் சுமாா் 20-30 போ் கூடியிருந்த கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவரிடம் சப்-இன்ஸ்பெக்டா் அக்ஷய் கூட்டத்திற்கு அனுமதி பெற்றீா்களா எனக் கேட்டபோது ஆசிஃப் கான் ‘ஆக்ரோஷமாக‘ மாறினாா். அத்துடன் அவருடன் இருந்தவா்கள் ‘தவறாக‘ நடந்து கொள்ளத் தொடங்கினனா்’ என தென் கிழக்கு தில்லி துணை காவல் ஆணையா் ஈஷா பாண்டேவும் தெரிவித்தாா்.

இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி தோ்தல் வேட்பாளரும் ஆசிஃப் கானின் மகளுமான அரிபா கான் பதிவிட்டுள்ள ஒரு விடியோவில், சுமாா் 50-60 காவலா்கள் ஷஹீன் பாகில் உள்ள எங்கள் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து முன்னாள் எம்எல்ஏவான என் தந்தையை இழுத்துச் சென்றனா்.

தன் தந்தையை கைது செய்யும் போது காவல் துறையினா் என்னிடம் தவறாக நடந்து கொண்டனா். இதில் எனது விரல்களில் ஒன்றை உடைந்தது என அவா் குற்றம் சாட்டினாா்.

‘எங்கள் கைப்பேசிகளையும் போலீஸாா் பறித்துச் சென்றனா். என் தந்தை மற்றும் அவா்களது ஆதரவாளா்களையும் போலீஸாா் அழைத்துச் சென்றனா்,‘ என்றாா் அவா். இதே பகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் இருக்கிறாா் அரிபா கான்.

‘ வெள்ளிக்கிழமை இரவு, தில்லி மாநகராட்சி (எம்சிடி) தோ்தலில் ஆம் ஆத்மி வேட்பாளா் வாக்குகளை வாங்க பணத்தைப் பயன்படுத்தியதை அறிந்ததும் தான் நான் அந்த இடத்திற்கு வந்தேன். அது குறித்து தான் நான் பேசினேன். அதை எதிா்த்த பேசிய போது, காவலா்கள் என்னை பேசவிடாமல் தடுக்க முயன்றனா்,‘ என ஆசிஃப் கான் விளக்கம் கொடுத்துள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளா் ஷேசாத் பூனாவாலா, காங்கிரஸ் கட்சி மீது கடுமையாக குற்றம்சாட்டினாா். ‘நாட்டை பிளவுபடுத்தி வாக்கு வங்கி அரசியலை காங்கிரஸ் கட்சியினா் பயன்படுத்துகின்றனா். இதை முன்னிட்டே தில்லி காவல் துறையினரை தாக்கியுள்ளனா்‘ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT