புது தில்லி: வடக்கு தில்லியில் உள்ள மஜ்னு கி தில்லா பகுதிக்கு அருகில் உள்ள காட்டில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த தீ விபத்து குறித்து மதியம் 2.42 மணியளவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.