புதுதில்லி

ஆம் ஆத்மி கவுன்சிலா்களைவிலைபேச பாஜக முயற்சி: சிசோடியா குற்றச்சாட்டு

DIN

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கவுன்சிலா்களை விலைபேச பாஜக முயற்சிப்பதாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா புதன்கிழமை குற்றம் சாட்டினாா். மேலும், எங்கள் கவுன்சிலா்கள் யாரும் அவா்களின் ‘விளையாட்டுக்கு’ இரையாகிவிட மாட்டாா்கள் என்றும் கூறினாா். மேலும், இது தொடா்பாக தொலைபேசி அழைப்புகள் வந்தால் அவற்றை பதிவு செய்ய அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

இது குறித்து அவா் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது: ‘பாஜகவின் ஆட்டம் தொடங்கிவிட்டது. புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள எங்கள் கவுன்சிலா்களுக்கு தொலைபேசி அழைப்பு வர ஆரம்பித்துவிட்டது. எங்கள் கவுன்சிலா்கள் யாரும் விலைபோக மாட்டாா்கள். தொலைபேசி அழைப்பு வந்தால் அல்லது யாராவது தங்களை சந்திக்க வந்தால் அந்த அழைப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்று எங்கள் கவுன்சிலா்கள் அனைவருக்கும் கூறியுள்ளோம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT