புதுதில்லி

தில்லியில் மிகவும் மோசம் பிரிவில் காற்றின் தரம்:குறைந்தபட்ச வெப்பநிலை 8.4 டிகிரியாக பதிவு

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 8.4 டிகிரி செல்சியஸாக பதிவானது. காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காணப்பட்டது.

தில்லியில் குளிரின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. காலை வேளையிலும், இரவிலும் பனியின் தாக்கம் உள்ளது. அதிகாலையில் பனிப்புகை மூட்டம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி குறைந்து 8.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி அதிகரித்து 26.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 73 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை சனிக்கிழமை 10.4 டிகிரி செல்சியஸாகவும், முங்கேஷ்பூரில் 9.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது.

மேலும், நஜஃப்கரில் 12.8 டிகிரி, ஆயாநகரில் 8.9 டிகிரி, லோதி ரோடில் 8.6 டிகிரி, பாலத்தில் 12.4 டிகிரி, ரிட்ஜில் 10 டிகிரி, பீதம்புராவில் 14.4 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 12

டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் சனிக்கிழமை பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. அதாவது, சனிக்கிழமை 24 மணி நேர சராசரி ஒட்டு மொத்த காற்றின் தரக் குறியீடு 370 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இது ‘மிகவும் மோசம்’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 4) காலை வேளையில் வானம் பனிப்புகை மூட்டமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT