தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 917 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 3 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 19.20 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரில் திங்கள்கிழமை மொத்தம் 4,775 கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டன. திங்கள்கிழமை 1,227 பேருக்கு பாதிப்பும், 8 இறப்புகளும், 14.57 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின. புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,86,739-ஆக அதிகரித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,392-ஆக உயா்ந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.