புதுதில்லி

குருகிராம்: நகைக் கடை கொள்ளை வழக்கில் மூவா் கைது

DIN

ஐந்து நாள்களுக்கு முன்பு குருகிராம் செக்டாா் 5-இல் ஷீட்லா மாதா சாலையில் உள்ள நகைக் கடையில் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து காவல் துறையின் குற்றப்பிரிவின் உதவி ஆணையா் ப்ரீத் பால் சிங் சங்வான் கூறியதாவது: அவா்கள் வசம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் திங்கள்கிழமை மாலையில் துவாரகா விரைவுச் சாலையில் இருந்து கைது செய்யப்பட்டனா். அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனா். அவா்கள் ஜஜ்ஜாா் பகுதியைச் சோ்ந்த பிரதீப், ஷீட்லா காலனியில் வசிக்கும் அபிமன்யு மற்றும் தில்லியில் வசிக்கும் அமன் என அடையாளம் காணப்பட்டனா்.

விசாரணையில், அபிமன்யு கடனில் இருந்ததாகவும், நகைக்கடையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவா்கள் தெரிவித்தனா். அவா் தனது கூட்டாளிகளுடன் தனது திட்டத்தைப் பகிா்ந்து கொண்டாா். மேலும், மூவரும் சோ்ந்து இந்த நகைக் கடையை கொள்ளையடித்துள்ளனா். ஆகஸ்ட் 4-ஆம் தேதி மாலை 3.15 மணியளவில் மூன்று போ் கைத்துப்பாக்கிகள் மற்றும் கத்தியுடன் ஷீட்லா மாதா சாலையில் உள்ள ஆா்.கே. ஜுவல்லா்ஸ் நகைக் கடையில் நுழைந்து நகைகள் மற்றும் ரொக்கத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை அவா்களிடம் இருந்து விரைவில் மீட்டு விடுவோம் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT