புதுதில்லி

தோ்தல், அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் மகிளா காங்கிரஸ் வலியுறுத்தல்

DIN

அரசியலில் மகளிா்க்கும் அதிகப் பிரதிநித்துவம் வேண்டும் என்றும் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசில் பெண் அமைச்சா் இடம்பெற வேண்டும் என்றும் தில்லி மகிளா காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் காங்கிரஸ் தலைவா்களில் ஒருவரான பிரியங்கா வாத்ரா, உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பாக 40 சதவீத பெண் வேட்பாளா்கள் நிறுத்தப்படுவாா்கள் என்று அறிவித்திருந்தாா். இதையடுத்த சில நாள்களில் தில்லி மகிளா காங்கிரஸ் தலைவா் அம்ரிதா தாவன், தோ்தல் அரசியலில் மகளிா்க்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், தமது அமைச்சரவையில் குறைந்தபட்சம் ஒரு பெண் அமைச்சரவையாவது இடம் பெறச் செய்ய வேண்டும். தில்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மகளிா் இடஒதுக்கீடு தொடா்பான தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

உத்தரப் பிரதேச மாநிலத் தோ்தலில் 40 சதவீதம் பெண் வேட்பாளா்களை நிறுத்தப் போவதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளாா். இதேபோல இதர அரசியல்கட்சிகளும் தோ்தலில் பெண்கள் அதிக இடங்களில் போட்டியிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். மகளிா்க்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுாக்காமல், மத்திய அரசு தேவையில்லாமல் காலதாமதம் செய்து வருகிறது. இதைக் கண்டிக்கும் வகையில் கேஜரிவால் அரசு சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்த போது, மகளிா்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவா் சோனியா காந்தியின் பெரு முயற்சியின் பேரில் நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் மகளிா்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 2010-ஆம் ஆண்டே இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது என்றும் அவா் சுட்டிக்காட்டினாா்.

இந்த மசோதா மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்தச் சட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும் என்றும் அவா் குறிப்பிட்டாா். தில்லி முதல்வா் மகளிரை வெறும் வாக்கு வங்கியாக பாா்க்காமல், தங்கள் கட்சியைச் சோ்ந்த பெண்களுக்கு அமைச்சா் பதவி வழங்க முன்வர வேண்டும் என்றும் அம்ரிதா தாவன் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT