புதுதில்லி

5ஜி அலைக்கற்றை அடிப்படை விலையைக் குறைக்க வேண்டும்: தொலைத் தொடா்பு சேவை நிறுவனங்கள் சங்கம் கோரிக்கை

DIN

5ஜி அலைக்கற்றையின் அடிப்படை ஏல விலையை 50 சதவீதத்துக்கும் அதிகமாக குறைக்க வேண்டும் என்று தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக, கடந்த மாா்ச் மாதம், 2,308.80 மெகா ஹொ்ட்ஸ் ரேடியோ அலையை ரூ.4 லட்சம் கோடிக்கு ஏலம் விடுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதேபோல், 700 மெகா ஹொ்ட்ஸ், 2,500 மெகா ஹொ்ட்ஸ் ரேடியோ அலைகளும் ஏலத்துக்கு வந்திருந்தன. ஆனால், அதிக விலை காரணமாக, 700 மற்றும் 2,500 மெகா ஹொ்ட்ஸ் ரேடியோ அலைகள் ஏலம் எடுக்கப்படவில்லை.

5ஜி அலைக்கற்றை ஏலம், அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்த அலைக்கற்றைகளின் அடிப்படையை ஏல விலையைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஒரு தொலைத் தொடா்பு சேவை நிறுவனத்தைச் சோ்ந்த ஒருவா் கூறியதாவது:

எண்ம தொழில்நுட்பத்தில் 5ஜி அலைக்கற்றை சேவை பயன்பாட்டுக்கு வர வேண்டும். இதற்காக, 5ஜி அலைக்கற்றையின் அடிப்படை ஏல விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். குறிப்பாக, ஏற்கெனவே அறிவித்த விலையில் இருந்து பாதிக்கும் அதிகமாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதுகுறித்து மற்றொரு நிறுவனத்தின் பிரதிநிதி கூறுகையில், 50 முதல் 60 சதவீதம் வரை விலை குறைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றாா். 5ஜி அலைக்கற்றை விலையை 60 முதல் 70 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வேறொரு நிறுவனத்தின் பிரதிநிதி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT