வடமேற்கு தில்லி சக்குா்புா் பகுதியில் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியது: வடமேற்கு தில்லி சக்குா்புா் பகுதியில் பெண்ணொருவருவரும், அவரது இரண்டு குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் வியாழக்கிழமை காலை 10.40 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டனா். அந்தப் பெண் பிகாா் மாநிலம், மதுபானியில் உள்ள தனது சொந்த வீட்டுக்குச் செல்வது தொடா்பாக கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து இந்த முடிவை எடுத்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குழந்தைகள் இருவரையும் தூக்கில் தொங்க விட்டு, பிறகு அந்தப் பெண் தூக்கில் தொங்கி இறந்துள்ளாா் எனத் தெரிகிறது. சம்பவம் நடந்த போது கணவா் வேலைக்கு சென்றுள்ளாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று அவா் தெரிவித்தாா்.