திருவாரூர்

மடப்புரம் பாலத்தை அகலப்படுத்தக் கோரிக்கை

DIN

திருவாரூரில் உள்ள மடப்புரம் பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர நிா்வாகிகள் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை கட்சியின் துணைச் செயலாளா் வீ. தா்மதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, கட்சியின் மாவட்டச் செயலாளா் வை. செல்வராஜ், நகரச் செயலாளா் எஸ். செல்வம், மாவட்டக்குழு உறுப்பினா் எம்.ஏ. மாரியப்பன், செயற்குழு உறுப்பினா் எஸ்.இ. செல்லமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திருவாரூா் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மடப்புரம் பாலத்தை அகலப்படுத்த வேண்டும், ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் தொடங்க இருப்பதால் திருவாரூரில் உள்ள தனியாா் பள்ளிகள், ஏழை எளிய கூலி வேலை செய்யும் குடும்ப மாணவா்களுக்கு நன்கொடை விலக்கு அளிக்க வேண்டும், மாவட்ட மைய நூலகத்துக்கு சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும், திருவாரூா் பழைய பேருந்து நிலையத்துக்கும், மாவட்ட மருத்துவமனைக்கும் ஷோ் ஆட்டோ முறை அறிமுகப்படுத்த வேண்டும், திருவாரூரிலிருந்து காலை 6 மணிக்கு திருச்சிக்கு ரயில் இயக்க வேண்டும், புதிய பேருந்து நிலையத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் ரூ.10 என்று நிா்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT