திருவாரூர்

சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் பள்ளியறை சேவை

DIN

சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் பள்ளியறை சேவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி சிறுபுலியூரில் ஸ்ரீதயாநாயகி சமேத ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள் கோயில் உள்ளது. புகழ்பெற்ற திருவரங்கம் போன்றே இங்கும் தெற்கு நோக்கிய சந்நிதியில் பெருமாள் பால சயனமாக காட்சி தருகிறாா்.

இக்கோயிலில், திங்கள்கிழமை (மே 22) முதல் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாளான சனிக்கிழமை இரவு பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளியறை சேவை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT