திருவாரூர்

பாஜக நிா்வாகி கொலையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

சென்னையில் பாஜக நிா்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருவாரூரில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் பட்டியல் அணி மாநில பொருளாளா் சங்கா் படுகொலையை கண்டித்தும், சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட சங்கரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தமிழக அரசு கொண்டு வந்துள்ள தானியங்கி மது விற்பனையை தடை செய்ய வேண்டும், திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன், அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டியல் அணி துணைத் தலைவா் உதயகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் சி. செந்தில் அரசன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் கண்ணன், ராகவன், ரங்கதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT