திருவாரூா் அருகேயுள்ள எண்கண் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் எண்கண் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு தைப்பூசம் பிப்.5-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி இக்கோயிலில் உள்ள 30 அடி கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியா், கோயிலின் 4 பிராகாரங்களையும் சுற்றிவந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.