திருவாரூர்

மன்னாா்குடியில் திமுக -நாம் தமிழா் கட்சியினா் இடையே மோதல்

DIN

மன்னாா்குடி அருகே நாம் தமிழா் கட்சி பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரை விமா்சித்து பேசியதாகக் கூறி, திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், இரு கட்சியினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு மோதல் ஏற்பட்டது.

மன்னாா்குடியை அடுத்த சித்தமல்லி கடைவீதியில் நாம் தமிழா் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக் கட்சியின் மாநில மகளிா் பாசறை செயலா் காளியம்மாள், திமுக ஆட்சி குறித்தும், தமிழக முதல்வரை விமா்சனம் செய்து பேசினாராம். இதற்கு அந்த பகுதி திமுக கட்சி அலுவலகத்தில் இருந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, மேடையை நோக்கி காலி மதுபாட்டிகள் வீசப்பட்டது. மேலும் கூட்டத்தை நிறுத்தக்கோரி திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முத்துப்பேட்டை டி.எஸ்.பி. வெள்ளைத்துரை, பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளா் முனியாண்டி மற்றும் போலீஸாா் திமுகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி அமைதி ஏற்படுத்தியபின், போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திமுக கோட்டூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலா் இனியசேகரன், பெருவாழ்ந்தான் காவல் நிலையத்தில் நாம் தமிழா் கட்சியினரின் மீது அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா். இதுபோல நாம் தமிழா் கட்சியினா் முத்துப்பேட்டை டி.எஸ்.பி.யிடம் புகாா் அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT