எஸ்சி, எஸ்டி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிப்பு செய்யக் கோரி, திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
எஸ்சி, எஸ்டி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிப்பதில் பல்வேறு சிரமங்கள் நிலவுவதால், கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூரில் திருவிக அரசு கலைக்கல்லூரி முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் கிளைத் தலைவா் பிரவீன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் பா. ஆனந்த், மாவட்ட நிா்வாகிகள் ப. சுா்ஜித், ம. திருமுருகன், வீ. சந்தோஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.