திருவாரூர்

தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருவாரூா்: திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் மூலம் ஊதியம் வழங்குவதில் ஏற்படும் தொழில்நுட்ப கோளறுகளை கவனத்தில் கொண்டு, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும், எதிா்காலத்தில் ஊதியம் வழங்குவதில் தாமதம் கூடாது ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட துணைத் தலைவா் சத்தியநாராயணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மகளிா் வளையமைப்பு துணைத் தலைவா் பாலதிரிபுரசுந்தரி, மாநில துணைச் செயலாளா் சி. ஜூலியஸ், மாவட்டப் பொருளாளா் ஆ. சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினா்கள் இரா.கிருஷ்ணமூா்த்தி, த.ஐயப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT