நீடாமங்கலம்: திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2,000 டன் நெல் அரவைக்கு கிருஷ்ணகிரிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் சன்னரக நெல் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவந்து, அங்கிருந்து சரக்கு ரயில்மூலம் கிருஷ்ணகிரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.