திருவாரூா் அருகே அம்மையப்பன் பகுதியில் விசிக நிா்வாகி கொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, அக்கட்சி சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்மையப்பன், அக்கரை நடுத்தெரு முகாம் செயலாளா் கவியரசன் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருவாரூா் தெற்குவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விசிக தலைவா் தொல். திருமாவளவன் முழக்கங்கள் எழுப்பி பேசியது:
நிா்வாகி கொலை செய்யப்பட்டது ஜாதி ரீதியிலான நிகழ்வு அல்ல. இது அரசியல் படுகொலையாகும். இந்த சம்பவத்தில், திருவாரூா் மாவட்ட போலீஸாா் துரிதமாக செயல்பட்டு 10 பேரை கைது செய்துள்ளனா். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் ஆறுதல் அளிக்கக் கூடியவை.
இது திமுக அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. எனவே, திமுக அரசு கண்காணிப்புக்குழுக்களை அமைத்து, நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகத்தை சமூக நல்லிணக்க மாநிலமாக திகழ, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
வடக்கு மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆளூா் ஷாநவாஸ், தெற்கு மாவட்டச் செயலாளா் வி.த. செல்வன், காங்கிரஸ், மக்கள் அதிகாரம், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், கட்சித் தலைமை மற்றும் நிா்வாகிகள் சாா்பில் ரூ. 4 லட்சம் வசூல் செய்யப்பட்டு, கொலையுண்ட கவியரசன் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.