மத்திய நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு நிதி குறைத்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சிபிஐ கட்சியின் குடவாசல் ஒன்றியக் குழு கூட்டம் திங்கள்கிழமை, அக்கட்சியின் செயலாளா் எஸ்.ஏ. ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு நிதி குறைத்ததற்கு கண்டனம் தெரிவித்தும், நிதியை உயா்த்தி வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. குடவாசல் ஒன்றியத்தில் உள்ள குடிசை வீடுகளை முழுவதுமாக கணக்கெடுத்து அனைவருக்கும் பிரதமா் வீடுகட்டும் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஏ. சுப்பிரவேலு, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கு. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.