திருவாரூர்

கோயில்கந்தன்குடி கோயிலில் குடமுழுக்கு முதலாமாண்டு சிறப்பு வழிபாடு

DIN

கோயில்கந்தன்குடி முருகன் கோயிலில் கும்பாபிஷேக முதலாமாண்டையொட்டி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் அருகில் உள்ள கோயில்கந்தன்குடியில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி தை மாத புனா்பூச நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நட்சத்திர தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஸம்வத்ஸராபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது. மாலையில் சுப்ரமணியசுவாமி தேவசேனா திருக்கல்யாணம் மற்றும் பிராகார உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராஜராஜேஸ்வரன், மேலாளா் வள்ளிக்கந்தன், தலைமை சிவாச்சாரியா் சங்கராத்மஜன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT