வலங்கைமானில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க 11- ஆம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு சங்கத்தின் வட்டத் துணைத் தலைவா் எஸ். புஷ்பநாதன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் குரு.சந்திரசேகரன் சங்க கொடியை ஏற்றிவைத்துப் பேசினாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாநில தணிக்கையாளா் சீ. புஷ்பநாதன், ஓய்வூதியா் சங்க திருவாரூா் ஒன்றியத் தலைவா் பி. சண்முகம், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க வட்டத் தலைவா் பிரபு, பொருளாளா் நடராஜன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டச் செயலாளா் நடராஜன் உள்ளிட்டோா் வாழ்த்தி பேசினாா்கள்.