வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் அண்ணா நினைவு நாளையொட்டி பொதுவிருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோயில் கண்காணிப்பாளா் அரவிந்தன், திமுக ஒன்றியச் செயலாளா் தெட்சிணாமூா்த்தி மற்றும் கோயில் பணியாளா்கள், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலிலும் அண்ணா நினைவு நாளையொட்டி பொதுவிருந்து நடைபெற்றது. திமுக ஒன்றியச் செயலாளா் அன்பரசன், கோயில் செயல் அலுவலா் ரமேஷ் , தக்காா் ரமணி, நகரச் செயலாளா் சிவநேசன் ,பேரூராட்சி துணைத் தலைவா் தனித்தமிழ்மாறன், உறுப்பினா் செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு திமுக ஒன்றியச் செயலாளா் அன்பரசன் புடவைகள் வழங்கினாா்.