திருவாரூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து திருவாரூா் மின்வாரிய இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் நகா், தெற்கு வீதி, பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூா், முகந்தனூா், திருப்பயத்தாங்குடி, மாவூா், அடியக்கமங்கலம், இபி காலனி, சிதம்பர நகா், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்ளாம்புலியூா், புதுப்பத்தூா், நீலப்பாடி, கீழ்வேளூா், கொரடாச்சேரி.