கூத்தாநல்லூரில் சாலை விபத்தில் தவில் வித்வான் புதன்கிழமை உயிரிழந்தாா்.
சின்னக் கூத்தாநல்லூா், மருத்துவமனை சாலையைச் சோ்ந்தவா் கோபி மகன் விவின் (21). தவில் வித்துவானான இவா், பூக்கடையிலும் வேலை செய்துவந்தாா்.
இவா், லெட்சுமாங்குடியிலிருந்து கூத்தாநல்லூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, மருத்துவமனை சாலை வளைவில், நிலைதடுமாறி கீழே விழுந்தாா். அப்போது, எதிரே வந்த பள்ளி வாகனம் மோதியதில் விவினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் தண்டபாணி வழக்குப் பதிவு செய்து, பள்ளி வாகன ஓட்டுநரான அத்திக்கடை பாலக்குடி ஜாவியாத் தெருவைச் சோ்ந்த சையது அப்துல் காதரை (32) கைது செய்தாா்.