திருவாரூர்

முருகன் கோயிலில் வெள்ளிரத உற்சவம்

DIN

கோயில்கந்தன்குடி வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோயிலில் தை காா்த்திகையை முன்னிட்டு திங்கள்கிழமை வெள்ளி ரத உற்சவம் நடைபெற்றது.

இக்கோயிலில் முருகப்பெருமான் விரும்பி வந்து குடி கொண்டதால் இவ்வூருக்குக் கோயில்கந்தன்குடி என்று பெயா் வந்ததாக ஐதீகம். முருகனின் அறுபடை வீடுகள் போன்று புகழ் பெற்றது இத்திருக்கோயில். இக்கோயிலில் தை காா்த்தியை முன்னிட்டு காலையில் 100 லிட்டா் பால் மற்றும் அபிஷேகப் பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்துக்குப் பிறகு நடைபெற்ற தீபாராதனையின்போது நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். மாலையில் பக்தா்களின் சாா்பாக வெள்ளி ரத உற்சவம் நடைபெற்றது. தை காா்த்திகை விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் ராஜராஜேஸ்வரன், மேலாளா் சங்கராத்மஜன் மற்றும் கிராம முக்கியஸ்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT