திருவாரூர்

அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதி நிறைவேற்றித் தரக் கோரி காத்திருப்பு போராட்டம்

DIN

திருத்துறைப்பூண்டி: திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசு உயா்நிலைப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மருதவனம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடத்தை சுற்றி சுற்றுச் சுவா் அமைத்துத் தர வேண்டும், சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி செய்து தர வேண்டும் , சமையல் கூடம் அமைத்துத் தர வேண்டும், கழிவறை வசதியை மேம்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினா் ஐ. வி. நாகராஜன், முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளா் கே பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா் .

தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் ஜி.மலா்க்கொடி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் அவா்களிடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT