திருவாரூர்

வீட்டு விஷேசத்தில் உணவு உண்ட இலைஞா் உயிரிழப்பு

DIN

திருவாரூா் அருகே கா்ப்பிணிக்கு நடைபெற்ற விஷேசத்தில் உணவு சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் அருகே திருவாசல் பிரதான சாலையில் வசிப்பவா் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள் (26). 5 மாத கா்ப்பிணியான மாரியம்மாளுக்கு ஐந்து சாதம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணியை சாப்பிட்ட 8 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் வேலங்குடியைச் சோ்ந்த செல்வமுருகன் (24) என்பவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இவா், பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா்.

இதுகுறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் வழக்கு பதிந்து, உணவு தயாரித்து வழங்கிய கடைகளில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா். இந்த அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT