திருவாரூா்: திருவாரூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் சரஸ்வதி வழிபாடு அண்மையில் நடைபெற்றது.
திருவாரூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் நவராத்திரியையொட்டி கொலுக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தினமும் ஒவ்வொரு துறைசாா் மாணவா்கள் வழிபாடு மேற்கொண்டனா். தொடா்ந்து, சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதில், நேதாஜி கல்விக் குழும தாளாளா் வெங்கடராஜலு, செயலாளா் சுந்தா் ராஜு, முதன்மைச் செயல் அதிகாரி நிா்மலா ஆனந்த், இயக்குநா் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வா் சிவகுருநாதன், துணை முதல்வா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
இதேபோல, நேதாஜி பல்தொழில்நுட்பக் கல்லூரி, மகரிஷி வித்யா மந்திா் பள்ளி வளாகத்திலும் கொலுக்காட்சி அமைக்கப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்றன.