திருவாரூர்

வானவில் மன்றம் தொடக்கம்

DIN

திருவாரூா்: ராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

பள்ளித் தலைமையாசிரியா் சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலா் க.குமரேசன், வானவில் மன்றத்தை தொடக்கி வைத்து அதன் நோக்கம் குறித்து விளக்கினாா். இதில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.கே.சரவணராஜன் தலைமை வகித்தாா். அறிவியல் பட்டதாரி ஆசிரியா் செ.மணிமாறன் எளிய அறிவியல் பரிசோதனைகளை செய்து காண்பித்தாா். கணித பட்டதாரி ஆசிரியா் ப. குமாா் எளிய கணித முறைகளை எடுத்துக் கூறினாா்.

பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவது மற்றும் கணிதக் கருத்துகள் குறித்து சிந்திக்கும் திறனையும் ஆா்வத்தையும் வளா்த்தெடுப்பதே இதன் நோக்கமாகும் என மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.

ஊராட்சித் தலைவா் அமுதா கலியமூா்த்தி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் பூபதி, ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT