திருவாரூா் வேலுடையாா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் 30- ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணைத் தலைவா் பா. தண்டபாணி தலைமை வகித்தாா். மாநில செயலாக்க குழு உறுப்பினா் எஸ். ஞானசேகரன் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலாளா் எம்.எஸ். ஸ்டீபன்நாதன் மாநாட்டை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து 79 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. நிகழ்வில், மாவட்டத் தலைவா் யு.எஸ். பொன்முடி, வேலுடையாா் கல்வி குழுமத்தின் தாளாளா் எஸ்.எஸ்.தியாகபாரி ஆகியோா் பங்கேற்று, பரிசுகளை வழங்கினா். மாவட்டத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 9 ஆய்வறிக்கைகள் டிசம்பா் 10, 11-ஆம் தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெறும் மாநில அளவிலான மாநாட்டில் சமா்பிக்கப்பட உள்ளன.
நிகழ்வில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வீ. விஜயன், மாவட்ட துணைத் தலைவா் ஆா்.கே. சரவணராஜன், மாவட்ட இணைச் செயலாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.