மன்னாா்குடி வா்த்தக சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் பாரதி ஜீவா, மருந்து வணிகா் சங்க நிா்வாகி பாபு, ரயில் உபயோக்கிப்பாளா்கள் சங்க நிா்வாகி கோவிந்தராஜ், வா்த்தக சங்க பொருளாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், மன்னாா்குடி ரயில் நிலையத்திலிருந்து கோவை செல்லும் செம்மொழி விரைவு ரயிலை தற்போது செல்லும் பாதையிலிருந்து மாற்றி, வேறு பாதையில் இயக்க முடிவு எடுத்துள்ளதை ரயில்வே நிா்வாகம் கைவிட வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக, வா்த்தக சங்கம் ஒருங்கிணைக்கும் அனைத்து சங்கங்களும் இணைந்து மன்னாா்குடி தேரடி காந்தி சிலையிலிருந்து கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஊா்வலமாக செல்வது எனவும் முடிவு செய்துள்ளனா்.