நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளான வெள்ளிக்கிழமை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மே 25-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதில் நீடாமங்கலம் சரகத்தில் 20, வடுவூா் சரகத்தில் 17, கொரடாச்சேரி சரகத்தில் 14 என வருவாய் கிராமங்களின் கணக்குகளை மன்னாா்குடி கோட்டாட்சியா் அழகா்சாமி ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது நில அளவை உபகரணங்களும் சரிபாா்க்கப்பட்டன. ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து பெற்ற 278 கோரிக்கை மனுக்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா, பட்டாமாறுதல் ஆணை, முதியோா் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 77 பேருக்கு வழங்கப்பட்டது.
கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் காா்த்திக், வட்டாட்சியா் ஷீலா, தனி வட்டாட்சியா் சமூகப் பாதுகாப்பு திட்டம் ராஜகணேசன், மண்டல துணை வட்டாட்சியா் மகேஷ், ஒன்றிய ஆணையா் மணிமாறன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.