குடவாசல் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 28 ஆம் தேதி மின்தடை ஏற்படும் என குடவாசல் துணை மின்நிலைய உதவிச் செயற்பொறியாளா் எஸ். உஷா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடவாசல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ஜூன் 28 ஆம் தேதி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி மற்றும்அதைச்சுற்றியுள்ள பகுதிகளில், அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.