திருவாரூா் மாவட்டத்தில் இருந்து ஆயிரம் டன் நெல் அரவைக்கு திருச்சிக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னாா்குடி வட்டங்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் சன்னரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் ஏற்றி திருச்சிக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.