திருவாரூர்

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

DIN

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூரில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாணவா், இளைஞா் அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும், ராணுவத்தில் ஒப்பந்த முறையைப் புகுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் சு. பாலசுப்ரமணியன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். சலாவூதீன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இந்திய வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி. ஜோதிபாசு, இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் ரா. ஹரிசுா்ஜித், மாணவா் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினா் க. கோபி, இளைஞா் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினா் நல்லசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT