கூத்தாநல்லூா் வட்டம், பொதக்குடியில் அனைத்து வா்த்தகா் நலச் சங்க மாதாந்திரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் எஸ்.ஏ. ஜெஹபா்அலி தலைமை வகித்தாா். செயலாளா் வி.கே.எஸ். செல்லப்பா முன்னிலை வகித்தாா். பொருளாளா் கே.எம். கொத்துபுதீன் வரவேற்றாா்.
கூட்டத்தில், அனைத்து கடைகளிலும் மஞ்சப்பை பயன்படுத்தப்பட வேண்டும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக ஜெ.முஹம்மது சுலைமான் நன்றி கூறினாா்.