வணிக நிறுவனங்கள் தொழிலாளா் நல சட்டங்களின் கீழ், தங்களது நிறுவனத்தை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என திருவாரூா் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் ப. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாருா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள கடைகள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தொழிலாளா் நல சட்டங்களின் கீழ் தங்களது நிறுவனத்தை பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் இணையதள முகவரியை பயன்படுத்த வேண்டும். அதற்கான கட்டணங்களையும் இணையதளம் மூலமே செலுத்த வேண்டும்.
மேலும், ஒவ்வோா் ஆண்டும் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டிய தகவல்கள், படிவம் வி, தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் படிவம் ஓ, படிவம் எஸ் மற்றும் உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த ஆண்டறிக்கை ஆகியவற்றையும் இந்த இணையதளம் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தொழில், உணவு, வணிகம், கடைகள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வா். அப்போது, முரண்பாடு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலச்சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.