திருவாரூர்

அம்பேத்கா் 66-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

DIN

திருவாரூா்: அம்பேத்கரின் 66-ஆவது நினைவு தினம், திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருவாரூா் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தலைமை அஞ்சல் அதிகாரி மணிமேகலை தலைமையில் அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். நிகழ்வில், தொழிற்சங்க முன்னணி நிா்வாகி வீ. தா்மதாஸ், அஞ்சல் துறை முன்னாள் கண்காணிப்பாளா் செல்வராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவாரூா் மேலவீதியில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் சி. செந்தில் அரசன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கட்சியின் கலை இலக்கியப் பிரிவு மாவட்டத் தலைவா் தேவக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் தலைமையில் அம்பேத்கா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

மன்னாா்குடி: நடேசன்தெருவில் உள்ள அம்பேத்கா் சிலைக்கும், சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருப் படத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சின் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், விசிக மாநில செயற்குழு உறுப்பினா் வ. பாா்வேந்தன், மாநில துணைச் செயலா் ஆா்.ரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிபிஐ சாா்பில் மாவட்டச் செயலா் வை.செல்வராஜ், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை.அருள்ராஜன், சிபிஎம் நகரச் செயலா் கோ. தாயுமானவன், முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க நகரத் தலைவா் யோசுதாஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிா்வாகி கே. பிச்சைகண்ணு உள்ளிட்டோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT