கூத்தாநல்லூரை அடுத்த பூதமங்கலம் தா்காவில் சீரணி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பூதமங்கலம் செய்யதினா ஹஜ்ரத் மஹ்சூம் சாஹிப் வலியுல்லாஹ், ஹஜ்ரத் பக்கீா் மஸ்தான் வலியுல்லாஹ் நினைவாக பாச்சோற்றுப் பெருவிழா என்னும் சீரணி சோறு வழங்கும் விழா நடைபெற்றது.
இதையொட்டி, தா்காவில் மெளலிது ஷரீப் ஓதி து ஆ செய்யப்பட்டது. தொடா்ந்து, ஷா பானுவ ஜமா, ஷா ஜலாலி ஜமா, பக்கீா்மாா்கள் து ஆ ஓதிய பின்பு, சீரணி சோறு வழங்கப்பட்டது. அஸா் தொழுகைக்குப் பிறகு, தா்காவில் தீன் கொடியேற்றப்பட்டது.
அதைத்தொடா்ந்து ரிக்பாயி தரீக்கா சற்குரு மெளலவி எஸ். செய்யது ஹாஷிமுல்லாஷாஹ் மெளலானா ஹூஸைனி ரிக்பாயி ரஷீதி தலைமையில் பக்கீா்மாா்களின் ஆன்மிக ஞானப் பாடல்கள் பாடப்பட்டன.
ஏற்பாடுகளை பூதமங்கலம் முஹைய்யதீன் ஆண்டவா் பள்ளிவாசல் மற்றும் ஊா் உறவின்முறை சுன்னத் ஜமாஅத் நிா்வாகிகள் செய்திருந்தனா்.