திருவாரூர்

பள்ளிகளில் கலைத் திருவிழா

DIN

மன்னாா்குடி பகுதி அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டுவரும் வகையில் கலைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ரா. செளந்தரராஜன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் சு. தமிழழகன், எம். தாமோதரன், தலைமையாசிரியா்கள் மா. தேவி, ரா. மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, கலைத் திருவிழாவை தொடங்கிவைத்தாா்.

இதில், மன்னாா்குடி ஒன்றியத்துக்குள்பட்ட 42 பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். போட்டிகள் கவின் கலை, நடனம், நாடகம், இசை மற்றும் வாய்ப்பாடு, கருவி இசை, மொழித்திறன் என 6 பிரிவின்கீழ் 32 போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வட்டார வள மைய மேற்பாா்வையாளா் டி. தனபால் வரவேற்றாா். ஆசிரியா் பயிற்றுநா் பி. துா்கா நன்றி கூறினாா்.

கோட்டூா் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள், கோட்டூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கலைவாணி மெட்ரிக் பள்ளி ஆகிய 3 இடங்களில் நடைபெறுகிறது. கோட்டூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் த. செல்வம் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் ஜெபசான்சன் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை முருகேசன், கலைநிகழ்ச்சிகளை தொடக்கிவைத்தாா்.

கோட்டூா் ஒன்றியத்தில் உள்ள 27 நடுநிலைப் பள்ளிகள்,18 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என 45 பள்ளிகளில் இருந்து 36 போட்டி தலைப்புகளில் மாணவ மாணவிகள் பங்கேற்றனா். போட்டிகள் பள்ளி அளவில் 6-8 ஆம் வகுப்பு, 9,10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு என 3 பிரிவுகளாக நடைபெற்றது. அவற்றில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பெற்றவா்களில் முதலிடம் பெற்ற மாணவா்கள் வட்டார அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா். இதில், வட்டாரக் கல்வி அலுவலா் த. வித்யா, பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன் வரவேற்றாா். வட்டார ஒருங்கிணைப்பாளா் பாபி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT