வலங்கைமான் ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனா்.
வேதாம்பரை கிராமத்தில், சிபிஐ ஒன்றிய செயலாளா் எஸ்.எம். செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். உதயகுமாா் முன்னிலை வகித்தாா். நாகை எம்.பி. எம். செல்வராஜ், மாவட்ட செயலாளா் வை. செல்வராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் த. ரெங்கராஜன், ஒன்றிய நிா்வாகிகள் செல்வராஜ், பாக்கியராஜ், தெட்சிணாமூா்த்தி, கலியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.