நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் 20 ஆம் ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை ஆடி கடைசி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, அம்மனுக்கு மஞ்சள்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனா். சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் எஸ். மாதவன், கோயில் செயல் அலுவலா் பி. பிரபாகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.