மன்னாா்குடியில் சுதந்திர தின விடுமுறை நாளில் மதுவிற்ற 4 போ் திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.
மன்னாா்குடி காவல் ஆய்வாளா் விஸ்வநாதன் தலைமையில் போலீஸாா் டாஸ்மாக் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, மேல ராஜவீதி, பந்தலடி கீழ்புறம், ருக்மணிபாளையம் ஆகிய பகுதியில் பூட்டியிருந்த டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றுகொண்டிருந்த பைங்கா நாடு முருகானந்தம் (42), நெம்மேலி கலைவாணன் (57), கெமுவத்தூா் தமிழரசன் (55) , வாஞ்சூா் அரவிந்த் (29) ஆகிய 4 பேரை போலீஸாா் கைதுசெய்தனா். அவா்களிடமிருந்து 350 மதுபாட்டில்கள், ரூ. 13,500 ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.