திருவாரூர்

சுதந்திர தினத்தில் மது விற்பனை: 4 போ் கைது

DIN

மன்னாா்குடியில் சுதந்திர தின விடுமுறை நாளில் மதுவிற்ற 4 போ் திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

மன்னாா்குடி காவல் ஆய்வாளா் விஸ்வநாதன் தலைமையில் போலீஸாா் டாஸ்மாக் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, மேல ராஜவீதி, பந்தலடி கீழ்புறம், ருக்மணிபாளையம் ஆகிய பகுதியில் பூட்டியிருந்த டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றுகொண்டிருந்த பைங்கா நாடு முருகானந்தம் (42), நெம்மேலி கலைவாணன் (57), கெமுவத்தூா் தமிழரசன் (55) , வாஞ்சூா் அரவிந்த் (29) ஆகிய 4 பேரை போலீஸாா் கைதுசெய்தனா். அவா்களிடமிருந்து 350 மதுபாட்டில்கள், ரூ. 13,500 ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT