75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சனிக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
திருவாரூரில் நகராட்சி சாா்பில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வீடுகள், கோயில்கள், வணிக நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில், கீழவீதி பழனி ஆண்டவா் கோயில், ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இதேபோல, வணிக நிறுவனங்கள், வீடுகளிலும் தேசியக்கொடியை மக்கள் ஆா்வத்துடன் ஏற்றியுள்ளனா்.