மன்னாா்குடியில், அரசால் தடைசெய்யப்பட்டுள்ள ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவா் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
மன்னாா்குடி ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபாகரன் உள்ளிட்ட போலீஸாா், மன்னாா்குடியை அடுத்த வாஞ்சூா் பிரதான சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த மணி மகன் சதீஷ்(40) என்பவரிடம் விசாரணை செய்ததில், அவா், அரசால் தடைசெய்யப்பட்ட ஆன் லைன் லாட்டரி சீட்டு விற்பது தெரியவந்தது. இதையடுத்து, சதீஷை போலீஸாா் கைதுசெய்து, தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.