நன்னிலம் வட்டம், முடிகொண்டானில் புதிதாக நெல் சேமிப்புக் கிடங்கு கட்ட பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் ரூ 7.68 கோடியில் 7000 மெ.டன் கொள்ளளவு கொண்டதாக இக்கிடங்கு கட்டப்படவுள்ளது.
இதற்கான பூமிபூஜையில் திருவாரூா் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் கழகத் துணைத் தலைவா் வே. மனோகரன் பங்கேற்று அடிக்கல் நட்டினாா். இதில், நன்னிலம் வட்டார லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அப்துல்ரசாக், நன்னிலம் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத் தலைவா் சக்திவேல், கல்வி குழு உறுப்பினா் செந்தில் மற்றும் நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் கலந்துகொண்டனா்.