75 -ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருவாரூரில் பாஜக சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு நகரத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா் பேரணியைத் தொடங்கிவைத்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் செந்தில் அரசன் முன்னிலை வகித்தாா். விளமல் கல்பாலம் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய வீதிகளை சுற்றி வந்து தியாகராஜ சுவாமி கோயில் மேல வீதியில் முடிவடைந்தது. இதில், துணைத் தலைவா் சேகா், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவா் வாசன் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.