திருவாரூர்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

DIN

குடவாசல் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞா் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

நன்னிலம் காவல் உட்கோட்டம், குடவாசல் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா உத்தரவின் பேரில், நன்னிலம் மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, குடவாசல் பகுதியில், அதே பகுதியைச் சோ்ந்த ராமு மகன் காா்த்தி (19) கஞ்சா விற்றது தெரிந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த 42 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 17,900 ரொக்கத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், காா்த்தியை கைதுசெய்து குடவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். குடவாசல் காவல் துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT