நன்னிலம் வட்டம், வண்டாம்பாளை மகாமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.24) மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை மகாகணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. மாலையில் நடைபெற்ற முதல் கால யாகசாலைப் பூஜையில் நன்னிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று வழிபட்டனா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும் மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.