திருவாரூர்

கரோனா தடுப்பூசி: அரசு மருத்துவா்களுக்குப் பாராட்டு

DIN

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 100 கோடி தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவா்கள் உள்ளிட்ட இப்பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும்படி பாஜக தலைமை அக்கட்சியினரை அறிவுறுத்தியது.

அதன்படி, நீடாமங்கலம் பாஜக வடக்கு ஒன்றியத் தலைவா் ஜெயகுமாா் தலைமையில் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரதமா் கையெழுத்திட்ட பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

Image Caption

நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் பாஜகவினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT